Metro Salem

The best guide to living, working and visiting Salem.

Day: September 9, 2022

ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 5-ந் தேதி இரவு பெய்த கனமழையின் காரணமாக ஏற்காடு- சேலம் மலைப்பாதையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 நாட்களாக இரவு, பகலாக போராடி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணி அளவில் சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

It has been raining heavily at night for the past few days in Yercaud. Landslides occurred at more than 50 places on Yercaud-Salem mountain road due to heavy rains on the last 5th night. Due to this, traffic was completely affected.Following this, the highway department employees rushed to the spot and worked day and night for 2 days to repair the accident. The road was opened for traffic at around 11 am the day before yesterday.

ஓடைகளில் இருந்து வெளியேறும் மழைநீர் வீடுகளில் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தெருக்களில் புகுந்தது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே உள்ள வரட்டாறு ஓடையை தூர்வாரி அகலப்படுத்துவது குறித்து மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள ஓடையை தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் கூறியதாவது:- சேலம் மாநகராட்சி பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் இருந்து வெளிவரும் மழைநீர் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

It has been raining continuously in Salem for the past few days. As a result, the water flowing out of the streams entered the houses and streets in the low-lying areas. In this situation Salem Astampatti Mandal TVS. Mayor Ramachandran, Commissioner Kristhraj, Advocate Rajendran MLA regarding the widening of the Varattaru stream near the bus stand. They visited and studied. They also visited and inspected the dredging of the stream in Saminathapuram area. At that time Mayor Ramachandran said:- Due to continuous rain in Salem Municipal Corporation areas, rainwater coming out from streams in various areas is causing disruption to the public as it flows into the roads and low-lying areas.